மஹாராஷ்டிரா கட்டிட விபத்தில் 4 சிக்கியிருந்த வயது சிறுவன் உயிருடன் மீட்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் மூன்றாம் மாடி திடீரென இடிந்து விழ தொடங்கியதை அடுத்து, சில நிமிடங்களிலேயே கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இதில் 60-க்கும் மேற்பட்டோர் தற்பொழுது மீட்கப்பட்ட நிலையில் 14-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த இடத்துக்கு தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்பகுதி மக்களுடன் சேர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த கட்டிட இடிபாட்டில் சிக்கிய 4 வயது சிறுவன் ஒருவன் மீட்பு படையினரால் சிறு காயங்களுடன் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தற்பொழுது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…