வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் தினமும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை ஒழிப்பதற்கான தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவை ஒழிக்க அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்களை நேரில் சந்தித்து பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், கர்நாடகாவின் தடுப்பூசி திட்டம் குறித்து எடுத்துரைத்துள்ளார். மேலும் கர்நாடகாவிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது இது குறித்து பேசியுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், கர்நாடக அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், கர்நாடகாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…