Categories: இந்தியா

ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ்.! வாட்ஸ்அப் பயனர்களுக்கு பிரதமர் மோடி நன்றி.!

Published by
செந்தில்குமார்

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சத்தில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி இணைந்தார். அப்போது தனது முதல் பதிவான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படத்தை செப்டம்பர் 19ம் தேதி பகிர்ந்துள்ளார்.

அவர் வாட்ஸப் சேனலில் இணைந்த ஒரே நாளில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றார். இந்த சேனலில் பிரதமர் மோடியின் படங்கள், வீடியோக்கள், செய்திகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் வாட்ஸ் அப் சேனலில் இணைந்த ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் (50 லட்சம்) ஃபாலோவர்ஸ்களை பிரதமர் மோடி கடந்துள்ளார். தற்போது, வாட்ஸ்அப் சேனலில் அதிக மற்றும் வேகமாக ஃபாலோவர்ஸ்களை எடுத்த உலகத் தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதற்கு தனது சேனலில் இணைந்த வாட்ஸ்அப் பயனர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது சேனலில் உள்ள பதிவில், “50 லட்சத்துக்கும் அதிகமான சமூகமாக நாங்கள் மாறிவிட்டதால், எனது வாட்ஸ்அப் சேனல் மூலம் என்னுடன் இணைந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உங்கள் ஒவ்வொருவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஈடுபாட்டிற்கும் நன்றி. இந்த அற்புதமான ஊடகத்தின் மூலம் நாங்கள் உரையாடலைத் தொடர்வோம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ந்து இணைந்திருப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…

8 minutes ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையனும் …எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

41 minutes ago

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

1 hour ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

2 hours ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

3 hours ago

வங்கதேசத்தில் விமான விபத்து : 19 பேர் பலி…100 பேர் காயம்!

உத்தரா  : ஜூலை 21 அன்று, வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி…

3 hours ago