டெல்லியில் அத்துமீறி நுழைந்த 5 தீவிரவாதிகள் – உளவுத்துறை அமைப்பு.!

Published by
Ragi

டெல்லியில் 5 தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடிபடை வீரர்களால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து நாசகார செயல்களில் ஈடுபடுவதற்காக நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் டெல்லியில் நுழைந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனால், டெல்லி உட்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் வாகன கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அது மட்டுமின்றி அதிரடி படை வீரர்களால் டெல்லி எல்லைகள் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது, டெல்லியில் உள்ள 15 மாவட்டங்கள் எங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், சீனா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட எல்லைப்பகுதியில் நிலவி வரும் சூழலை சாதகமாக பயன்படுத்தி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதால், எல்லைப் பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக வட டெல்லியை அதி தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மக்கள் அதிகமாக கூடும் சந்தை, மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் என பல இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும், டெல்லியில் வரும் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

35 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

52 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago