என்னமா இப்படி பண்றீங்களே ? இந்தியாவில் 50% பேர் முகக்கவசம் அணிவதில்லை

Published by
Sharmi

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது மிகமுக்கிய கவசமாக மக்களை பாதுகாப்பது முகக்கவசமே.

இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து 2000 பேருக்கு 25 நாட்கள் என்ற அடிப்படையில் சுகாதார அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதில் ஒரு நபர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அவரால் ஒரு மாதத்தில் 406 பேருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

சமூக இடைவெளியே மிக முக்கியமான சமூக தடுப்பூசி என்று தெரிவித்துள்ளனர்.  இது குறித்து, கொரோனா தொற்றை குறித்த வழக்கமான மாநாட்டில் சுகாதார அமைப்பின் அதிகாரி 100 பேரில் 7 பேர் மட்டுமே முகக்கவசம் அணிகிறார்கள் என்றும் மற்றவர்கள் கன்னம், வாய், கழுத்து போன்ற இடத்தில் அணிவதாகவும் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைப்பின் இணை செயலாளர் வியாழக்கிழமை அன்று முகக்கவசம் தொடர்பான ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

இதில் இந்தியாவில் 50%பேர் முகக்கவசம் அணியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மற்ற 50% பேரில் 14% மக்கள் மட்டுமே சரியாக முகக்கவசத்தை அணிகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதனால் இந்த கொடிய நோயிலிருந்து தப்பிக்க நாம் அனைவரும் கடுமையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

10 minutes ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

37 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

39 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago