ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60 உயிர்கள் ஆபத்தில் உள்ளது – டெல்லி கங்கா ராம் மருத்துவமனை!

Published by
Rebekal

இன்னும் இரண்டு மணி நேர ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளதால், 60 உயிர்கள் ஆபத்தில் உள்ளதாக டெல்லி கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாளுக்கு நாள் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலை ஒரு புறமிருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சரியாக கொடுக்க முடியாத நிலை தற்போது பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நோயின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

ஏற்கனவே பல டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே அங்கு ஆக்சிஜன் இருப்பதாகவும் 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தானது நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனை இயக்குனர் அவர்கள் கூறுகையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் 40க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே,  25 பேர் கடந்த 24 மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு இருப்பதால் 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வெண்டிலேட்டர் மற்றும் கபாப் போன்ற கருவிகள் முறையாக செயல்படவில்லை எனவும் விமானத்தின் மூலமாவது உடனடியாக ஆக்சிஜன் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago