உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 600 கிராமங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன் இல்லாத அளவு இம்முறை அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர்மழையால் கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் அருகில் உள்ள 600 கிராமங்கள் தற்போது தண்ணீருக்குள் மூழ்கிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் இதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்கே நிவாரண பணிகளை அதிகமாக செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் பல கிராம மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையுடன் இணைந்து இந்திய ராணுவ வீரர்களும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…