கடந்த சில தினங்களாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே, அதனை ஈடுகட்டும் விதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, பாகிஸ்தானின் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான்-ஆப்கன் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை செய்வதில் காலம் தாமதம் செய்வதாகவும், இதனால் இந்தியாவிற்கு ஏற்றி செல்லப்படும் வெங்காயத்தில் 30% மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 70% வெங்காயம் காலம் தாழ்த்தும் காரணத்தால் வீணாக்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் தற்போதும் தனது நிலப்பரப்பை இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான இருவழி வர்த்தகத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்காமல் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…