அரசின் 79 கேள்விகள்.. ஜூலை 22-க்குள் பதிலளிக்காவிட்டால் டிக்டாக் உட்பட 59 செயலிகள் நிரந்தரமாக தடை!

Published by
Surya

டிக்டாக் உட்பட 59 செயலிகள், அரசு அறிவித்துள்ள 79 கேள்விகளுக்கு ஜூலை 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் அந்த செயலிகளுக்கு நிரந்தரமாக தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த தாக்குதலில் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் மேலும் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து அந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட அந்த 59 செயலிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) ஒரு அறிவிப்பை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பில், 72 கேள்விகளை கொண்ட பட்டியலை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.

இந்த சீன பயன்பாடுகளுக்கு அனுப்பப்பட்ட 79 கேள்விகளின் முழுமையான பட்டியல் அவற்றின் பெருநிறுவன தோற்றம், பெற்றோர் நிறுவனங்களின் அமைப்பு, நிதி, தரவு மேலாண்மை, நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் அவை பயன்படுத்தும் சேவையகங்கள் பற்றி விளக்கமளிக்குமாறு தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான தரவை தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் பாதுகாப்பு அம்சங்களுடன், இந்த நிறுவனங்களால் “அங்கீகரிக்கப்படாத தரவு அணுகல்”  (unauthorised data access) தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் கேட்டுள்ளது.

அரசாங்கத்தின் வட்டாரங்கள் கேள்வித்தாளுடன், மத்திய அமைச்சகதின் அறிவிப்பில், “ஐ.டி சட்டத்தின் 69 வது பிரிவின் கீழ் பயன்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டது மற்றும் ஒரு இறையாண்மை கொண்ட அரசின் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்” என்று கூறுகிறது.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களுக்கு ஜூலை 22 க்குள் பதிலளிக்க அவகாசம் வித்திட்டுள்ளதாகவும், அவ்வாறு பதிலளிக்கவில்லை என்றால், அந்த செயலிகள் மீது விதிக்கப்பட்ட தடை நிரந்தரமாக மாறக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

8 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

9 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

11 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

11 hours ago