நாடு முழுவதும் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. கொரோனவால் நாடு முழுவதும் இதுவரை 17,265 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 543 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வைரஸிலிருந்து 2,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதனிடையே டெல்லியில் 186 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்று இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…