கொரோனாவால் 86 ரயில்வே ஊழியர்கள் உயிரிழப்பு..அறிவித்த ரயில்வே அதிகாரிகள்.!

Published by
கெளதம்

மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் 872 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் 86 பேர் இறந்துவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் இங்குள்ள மேற்கு ரயில்வே ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் து சிகிச்சை பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். இது ஏப்ரல் மாதத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதியாக அறிவிக்கப்பட்டது.

மொத்த கொரோனா தொற்றுகளில் 559 மத்திய ரயில்வேயிலும், 313 மேற்கு ரயில்வேவிலும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா காரணமாக இறந்த 86 நோயாளிகளில் 22 பேர் தற்போதுள்ள ரயில்வே ஊழியர்கள் மேலும் மத்திய ரயில்வேயில் 14 பேர் மற்றும் மேற்கு ரயில்வேயில் 8 பேர், மற்றவர்களில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 132 ரயில்வே ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சில சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்ட 700 உள்ளூர் ரயில் சேவைகள் இங்கு மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே ஆகிய இரண்டும் இயக்கப்படுகின்றன என தெரிவித்தனர்.

சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஜூன் 15 முதல் உள்ளூர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ரயில்வே ஊழியர்களிடையே கொரோனா தொற்றுக்கள் அதிகரித்துள்ளது என்று கூறினர்.

இந்நிலையில் அம்மாநிலங்களில் 15 முதல் 30 சதவிகிதம் மட்டுமே அலுவலகங்களுக்கு வருவதற்கு மாநில அரசு அனுமதித்தது. ஆனால் ரயில்வேயில் கிட்டத்தட்ட 100 சதவீத கள ஊழியர்கள் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து பணியாற்றி வருகின்றனர் என்று தேசிய ரயில்வே மஸ்டூர் யூனியன் தலைவர் வேணு நாயர் தெரிவித்தார்.

ரயில்வே பணியாளர்கள் மற்றும் பயணிகளிடையே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கவனம் செலுத்தி வருவதாக மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சிவாஜி சுதார் தெரிவித்தார்.

 

Published by
கெளதம்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

18 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago