தமிழகத்திற்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 907.75 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், கொரோனா தடுப்பு மருதத்துவ உபகரணங்களை வாங்க 3,000 கோடி தேவைப்படுகிறது.
கொரோனாவை தடுக்கவும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் 9,000 கோடி சிறப்பு நிதி தேவைப்படுகிறது. 2020-2021 -ம் ஆண்டு நிதிக்குழு மானியத்தில் 50 சதவீதத்தை ஊரக உள்ளாட்சிகளுக்கு விடுவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில், 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி, 26 மாநிலங்களுக்கு முதல் தவணையாக 15,187.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்திற்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 907.75 கோடியும், அதிகபட்சமாக உ.பி-க்கு 2,438 கோடியும், மகாராஷ்டிராவுக்கு 1,456.75 கோடியும், பீகாருக்கு 1,254.50 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 1,103 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…