இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இந்தியா மற்றும் சீனா இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து சீன ராணுவம், லடாக் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவித்திருக்கிறது.
இதன்காரணமாக எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கு சீனா இடையூறாக செயல்படுவதாகவும், இதைத்தொடர்ந்து சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ராணுவப் படைகளை அனுப்பி உள்ளது. இதனால் பாங்கோங் சோ ஏரி, கால்வன் பள்ளதாக்கு, டெம்சோக் ஆகிய பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
இரு நாட்டிற்கும் இடையே அடிக்கடி ஏற்படும் மோதல் போக்கை தவிர்க்க பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்தது.
இந்நிலையில் இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தை, இந்தியாவில் சுசுல் துறைக்கு எதிரே உள்ள மோல்டோவில் நடைபெறவுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…