2,200 கி.மீ தூரம் சைக்கிளில் புனித யாத்திரை மேற்கொண்ட 68 வயது மூதாட்டி.
மஹாராஷ்டிராவை சேர்ந்த 68 வயது மூதாட்டி ரேகா தேவ்பங்கர். இவர் வைஷ்ணவி தேவி மீது அதீத பக்தி கொண்டவர். இவர் கடந்த ஜூலை 24-ம் தேதி இமயமலையில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சைக்கிளில் புனிதயாத்திரை மேற்கொண்டார். நாள்தோறும் 40 கி.மீ தூரம் கடந்து, தற்போது 2,200 கி.மீ தூரம் பயணம் செய்து புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
சைக்கிள் ஒட்டி செல்லும் இந்த மூதாட்டியை, ட்வீட்டர் பயனாளர் ரத்தன் ஷ்ர்தா, அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் தான் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனை வீடியோ எடுத்த ஷர்தா, அந்த வீடியோவை, இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைஷ்ணவி தேவி கோயிலானது, ஜம்மு பகுதியில், இமயமலையில், 5,200கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருடந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இது ஒரு குகை கோயில் ஆகும்.
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…