வாயில் களிமண்ணை வைத்து அடைத்து 70 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை!

Published by
Rebekal

மத்திய பிரதேச மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் வாயில் களிமண்ணால் அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விடிஷா எனும் மாவட்டத்தில் போபாலுக்கு கிழக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில்70 வயதுடைய மூதாட்டி ஒருவர் வாயில் களிமண் அடைக்கப்பட்ட நிலையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து அவர் மகன் கூறுகையில் அவரது அம்மா காய்கறி பயிர் வைத்துள்ளதாகவும், அதை கவனித்துக் கொள்வதற்காக தோட்டத்திலுள்ள தங்களது குடிசையில் இரவு நேரத்தில் தூங்குவார் காலையில் வீட்டிற்கு வருவார் எனவும் கூறியுள்ளார். மேலும் கடந்த வியாழக்கிழமை அவர் வீட்டிற்கு வராததால் நான் அவரை பார்ப்பதற்காக வயலுக்கு சென்றேன். அங்கு காயங்களுடன் அம்மா உயிர் இழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவலர்களுக்கு தகவல் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.

இவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது தனிப்பட்ட உறுப்புகளில் அதிக அளவில் காயங்கள் இருந்ததாகவும், வாய்களில் களிமண் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் குற்றவாளிகள் யார் என்பதை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர். அவர்களை கைது செய்து தற்பொழுது மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 70 வயது மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago