இதனால் தான் வாக்கு சதவீதம் குறைகிறது.. தேர்தல் ஆணையம் பரபரப்பு குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரங்களை 48 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என்ற வழக்கு இன்று கோடைகால சிறப்பு அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மக்களவை தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் வேளையில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவுடையும் போதும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு வரும் வாக்குப்பதிவு சதவீதம் பற்றி உச்சநீதிமன்றத்தில் ஓர் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதில், ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் போதும், நிறைவடைந்து 48 மணிநேரத்திற்குள் வாக்குப்பதிவு சதவீதத்தை துல்லியமாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்குசாவடியிலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது எனும் 17c படிவத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில் கூறுகையில், தேர்தல் ஆணையம் பற்றிய தவறான குற்றசாட்டுகள் தேர்தல் சமயத்தில் கூறப்படுவதால் மக்கள் வாக்களிப்பை இந்த புகார்கள் குறைத்துவிடும். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் இம்மாதிரியான வழக்குகள் காரணமாக தான் கடந்த காலங்களை விட வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என தனது வாதத்தை தேர்தல் ஆணையம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தது.

இதனை அடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் கோடைகால சிறப்பு உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, தற்போது மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், இந்த சமயம் இந்த வழக்கை விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து கோடை விடுமுறை முடிந்து, இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

10 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

11 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

12 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

12 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

13 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

14 hours ago