Categories: இந்தியா

டெல்லி வருமானவரித் துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.!

Published by
மணிகண்டன்

சென்னை : டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதலில் சம்பவ இடத்திற்கு சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பிறகு 4 வது மாடியில் பற்றிய தீ ஏசி வழியாக மற்ற இடங்களில் பரவும் நிலை அறிந்ததும் மேலும் 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, மொத்தம் 21 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையில்,  அலுவலகத்தில் உள்ளே இருந்த ஊழியர்களை ஜன்னல் வழியாக பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றினர். தற்போது தீ முழுதும் அணைக்கப்பட்டு குளிர்விக்கும் முயற்சி நடைபெற்று வருவதாககவும், இந்த தீ விபத்து எவ்வாறு நடந்தது என ஆய்வு செய்தும் வருகின்றனர். இந்த விபத்தில் ஆவணங்கள் மட்டுமே சேதம் அடைந்ததாகவும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

8 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

8 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

9 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

9 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

10 hours ago