Bus - Accident [File Image]
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர்-குஷிநகர் நெடுஞ்சாலையில் ஜகதீஷ்பூர் அருகே, நின்று கொண்டிருந்த பேருந்து பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை ஐந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சென்று கோரக்பூர் மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்து குறித்து விசாரிக்கையில், கோரக்பூரில் இருந்து வந்த ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பத்ருனாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜகதீஷ்பூரில் உள்ள மல்லப்பூர் அருகே பேருந்தின் ஒரு டயர் பஞ்சராகி உள்ளது.
காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.! சுகாதார அமைச்சகம்
இந்நிலையில், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு வேறு பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, எதிர்பாராத நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…