Categories: இந்தியா

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி..காப்பாற்றி கன்னத்தில் ‘பளார்’ விட்ட மீனவர்..வைரலாகும் வீடியோ!

Published by
பால முருகன்

உத்தரபிரதேசம் : ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒருவரை மீட்ட மீனவர் கரைக்கு வந்த பிறகு  கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தல்பூரில் காதல் ஜோடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியாகி மீனவர்கள் சிலர் காதல் ஜோடியை மீட்டனர்.

அப்போது, காதலனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தவுடன் மீனவர் “தற்கொலை செய்யவா நினைக்கிறாய் ” உயிரோட அருமை தெரியாதா?  என்பது போல கூறி ஆத்திரத்துடன் அந்த நபருடைய இரண்டு கன்னங்களிலும் ‘பளார்..பளார்’ என அறைந்தார். ஆத்திரம் அடங்காத நிலையில், மீண்டும் கன்னத்தில் அடித்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோட்வாலி நகரில் உள்ள கோலாகாட் என்ற இடத்தில் காதல் ஜோடி கோமதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், ஆற்றில் குதித்து தண்ணீரை குடித்த இளம்பெண் உடல்நிலை சரியில்லாமல் போன் நிலையில், இதையடுத்து, இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், கடந்த இரண்டு நாட்களில் இந்த காதல் ஜோடியின் இரண்டாவது தற்கொலை முயற்சி இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று கோமதி ஆற்றில் குதித்து இந்த காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், சரியான நேரத்தில் மீனவர் ஆற்றில் குதித்த காரணத்தால் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

5 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

5 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

6 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

6 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago