Muslim student in UP [File Image]
உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை கன்னத்தில் அறையை சொல்லியுள்ளார். கப்பர்பூர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வைரலாகும் அந்த வீடியோவில், மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி’ என ஆசிரியர் த்ரிப்தா தியாகி கூறுவது அதில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மன்சூர்பூர் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், பள்ளியின் முதல்வரிடம் பேசியதாகவும், வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் காவலர் கூறினார். அதன்படி, ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அடிப்படைக் கல்வித் துறை அதிகாரி சுபம் சுக்லா தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…