இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ்.! முதலிடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்.!

Published by
மணிகண்டன்

ஜலந்தர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் 2ஆம் இடத்தில் உள்ளது. 

கடந்த ஜனவரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில ஜலந்தர் மக்களவை தொகுதி எம்பி சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காலியாக இருந்த மக்களவை தொகுதிக்கு கடந்த மே 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் சார்பில் மறைந்த சந்தோக் சிங் சவுத்ரி மனைவி கரம்ஜித் கவுர் சவுத்ரி நிறுத்தப்பட்டார். மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி சார்பில் சுஷில் ரிங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகி வருகிறது. இதில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் ரிங்கு முதலிடம் பிடித்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளர் கரம்ஜித் கவுர் சவுத்ரி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் பாஜக வேட்பாளர் இருக்கிறார். இன்னும் இறுதி நிலவரம் வெளியாகவில்லை.

மறுபுறம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெருபான்மை பலத்துடன் முன்னேறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

34 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

60 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago