Arvind Kejriwal AAP [Image source : HT ]
ஜலந்தர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் 2ஆம் இடத்தில் உள்ளது.
கடந்த ஜனவரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில ஜலந்தர் மக்களவை தொகுதி எம்பி சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காலியாக இருந்த மக்களவை தொகுதிக்கு கடந்த மே 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் சார்பில் மறைந்த சந்தோக் சிங் சவுத்ரி மனைவி கரம்ஜித் கவுர் சவுத்ரி நிறுத்தப்பட்டார். மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி சார்பில் சுஷில் ரிங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்த இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகி வருகிறது. இதில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் ரிங்கு முதலிடம் பிடித்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளர் கரம்ஜித் கவுர் சவுத்ரி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் பாஜக வேட்பாளர் இருக்கிறார். இன்னும் இறுதி நிலவரம் வெளியாகவில்லை.
மறுபுறம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெருபான்மை பலத்துடன் முன்னேறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…