Categories: இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு.! ஆம் ஆத்மி எம்பி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.!

Published by
மணிகண்டன்

ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் புதிய மதுபான கொள்கை அறிமுகபடுப்படுத்தப்பட்டது. இதன்பெயரில் அரசாங்கத்திடம் இருந்த மதிப்பான விற்பனை தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 849 மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்ப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது.

இந்த புதிய மதுபான கொள்கை மூலம் அரசுக்கு சுமார் 2800 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்பட்டதாகவும், சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே டெல்லி காலால் துறை முன்னாள் அமைச்சரும், முன்னாள் டெல்லி முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது செய்து தற்போது வரை  டெல்லி சிறையில் விசாரணையில் இருக்கிறார்.  ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக, ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கின் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது இல்லம் தவிர்த்து மேலும் சில இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
மணிகண்டன்
Tags: #AAP#ED

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

9 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

9 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

10 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

11 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

11 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

13 hours ago