Categories: இந்தியா

விமானத்தின் காக்பிட்டுக்குள் பெண் நண்பரை அழைத்து வந்த இரண்டு விமானிகள் மீது நடவடிக்கை..!

Published by
செந்தில்குமார்

டெல்லி-லே செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டுக்குள் ஒரு பெண்ணை அழைத்து வந்ததற்காக இரண்டு விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து லே செல்லும் எஐ-445 விமானத்தின் கட்டுப்பாடு அறைக்குள் (காக்பிட்) அனுமதியின்றி பெண் நண்பர் ஒருவரை விமானிகள் அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து கட்டுப்பாடு அறைக்குள் பெண் பயணி அனுமதி இன்றி வந்தது தொடர்பாக, கேபின் குழுவினர் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு இரு விமானிகள் மீதும் ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பதில் அளித்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ), இந்த விவகாரம் குறித்து அறிந்திருப்பதாகவும், இதற்கு முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு ஏர் இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை. ஆனால், விரிவான விசாரணைக்காக ஏர் இந்தியா ஒரு குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், துபாயிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டிற்குள் தனது பெண் நண்பரை அழைத்து வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து  செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago