தெலுங்கானா மாநிலம் கொம்பரம் மாவட்டத்தில் உள்ள லிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி 30 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இறந்த பெண் அப்பகுதியில் பாத்திரங்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சேக் மக்தூம் (35), ஷேக் பாபு (30), சேக் ஷாபுதீன் (40) ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்ட சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நிதிபதி பிரியதர்ஷினி குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினர். தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய குற்றவாளிகளுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…