இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அனுபம் கெர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துள்ளார். அப்பொழுது பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமரை சந்தித்த பொழுது அவர் பிரதமருக்கு ருத்ராட்ச மணிகளை பரிசாக வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுபம் கெர் , மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நீங்கள் இரவும் பகலும் உழைத்து கொண்டிருக்கும், கடின உழைப்பிற்கும் நான் நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. மேலும் என் அம்மா அனுப்பிய ருத்ராட்ச மாலையை நீங்கள் ஏற்றுக் கொண்டது எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன்.
கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உதவி புரியட்டும். இதுபோல் அனைவருக்கும் ஆற்றலை கொடுத்து கொண்டே இருங்கள். ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், மிக்க நன்றி அனுபம் கெர், உங்கள் மதிப்பிற்குரிய அம்மா மற்றும் நாட்டு மக்களின் ஆசீர்வாதமே இந்தியாவிற்கு சேவை செய்ய தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…