போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ராகினி திவேத் பாஜக உறுப்பினர் இல்லை..! கர்நாடக பாஜக அறிவிப்பு.!

Published by
Ragi

போதை பொருள் விவகாரத்தில் கைதான ராகினி திவேத் பாஜக உறுப்பினர் இல்லை என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் அவர்களின் மரணத்தை அடுத்து பல குற்றச்சாட்டுகளை கங்கனா ரணாவத் கூறிய நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் போதை பழக்கம் அதிகமாகி விட்டதாகவும், போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை மே‌ற்கொ‌ண்டால் பல பிரபலங்கள் சிக்கலாம் என்று கூறியதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கன்னட திரையுலகில் போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரபல கன்னட நடிகையான ராகினி திவேத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தீவிரமாக போலீசார் ராகினியிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இவர் பாஜக கட்சியினை சேர்ந்தவர் என்றும் , இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜகவிற்கு ஆதரவாக பேசியதாகவும் கூறி பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் ராகினி உட்பட பல நடிகர் மற்றும் நடிகைகள் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்ததாகவும், அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும், மற்றபடி அவர் பாஜக உறுப்பினர் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இது போன்ற சட்ட விரோதமான பிரச்சினைகளில் ஈடுப்பட்ட ராகினிக்கு ஆதரவாக பாஜக செயல்படாது என்றும் , அவரது சொந்த பிரச்சனைகளில் பாஜக தலையிடாது என்றும், அவரை காப்பாற்ற முயற்சியும் பாஜக செய்யாது என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

8 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

8 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

9 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

9 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

10 hours ago