டெல்லியில், இந்த காற்று மாசு காரணமாக, 2020 முதல் ஆறு மாதத்தில் 24,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொதுவாகவே இந்தியாவை பொறுத்தவரையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், டெல்லியில், இந்த காற்று மாசு காரணமாக, 2020 முதல் ஆறு மாதத்தில் 24,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிரீன்பீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IQAir ஏர் விஷுவல் மற்றும் கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியாவின் புதிய ஆன்லைன் கருவியின் படி, டெல்லி கடந்த ஆறு மாதங்களில் காற்று மாசுபாடு காரணமாக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% க்கு சமமான, 26,230 கோடியை இழந்ததுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து,கிரீன்பீஸ் இந்தியாவின் காலநிலை பிரச்சாரகர் அவினாஷ் சஞ்சல் அவர்கள் கூறுகையில், காற்று மாசுபாடு ஒரு தீவிரமான பொது சுகாதார நெருக்கடியாகவும் நமது பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…