கட்டணம் உயர்த்திய ஏர்டெல், வோடபோன் நிறுவனம் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள்..!

Published by
பாலா கலியமூர்த்தி

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையில் தவித்து வந்த நிலையில், அவற்றை தீர்க்க ஒரே வழி கட்டண உயர்வு தான் என்ற நிலையில், பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளன.

இந்த கட்டண உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இதே போன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு டிசம்பர் 6-ல் அமலுக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்டெல் கட்டண உயர்வு பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், அன்லிமிடெட் பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41%  சதவிகிதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 84 நாட்களுக்கு, தினம் 1.5 ஜீபி டேட்டாவும், அன்லிமிடெட் கால் வசதியுடன் 31% சதவிகிதம் அதிகரித்தது. 448-லிருந்து, 598 ரூபாயாக உயர்ந்தது. அதைபோல் தினம், 1.5 ஜீபி டேட்டா திட்டத்திற்கான கட்டணம் 25% சதவிகிதம் உயர்த்தப்பட்டு, 199-லிருந்து 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே 356 நாட்களுக்கு 1,699 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 2,398 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன் ஜியோவை பின்பற்றி இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.

வோடபோன் மற்றும் ஐடியாவில் கட்டணம் 28 நாட்களுக்கு ரூ.17-ஆக இருந்தது, தற்போது ரூ.299-ஆக அதிகரித்துள்ளது. இதே 84 நாட்களுக்கு ரூ.569-ஆக இருந்தது. தற்போது ரூ.699 அதிகரித்துள்ளது. 365 நாட்களுக்கு ரூ.1,699 இருந்த கட்டணம் ரூ.2,399 அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதில் எவ்வளவு இலவச கால்கள், டேட்டா கட்டணம் என விரிவாக கொடுக்கப்படவில்லை.

இந்த சமயத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், தொலைதொடர்பு சேவை கட்டணத்தை, 40% சதவிகிதம் வரை உயர்த்தி, அதேசமயம் பிற நிறுவனங்களை விட கூடுதல் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. 40% சதவிகித கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதைவிட 300 மடங்கு சலுகையை அறிவித்துள்ளது ஜியோ. இந்த நிறுவனத்தின் கட்டண உயர்வு, டிசம்பர் 6-ல் நடைமுறைக்கு வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago