ஜியோ நிறுவனமானது தனது இன்கமிங் கால் ரிங் கால அளவை 20 வினாடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பொதுவாக நம் நாட்டில் அனைத்து இன்கமிங் ரிங் அளவு 45 விநாடிகள் ஆகும். அதனை ஜியோ நிறுவனம் 20 விநாடிகளாக குறைத்துள்ளது. இதன் காரணமாக தனக்கு வரும் இன்கமிங் கால்களில் அழைப்புகளில் 30 சதவீதம் மிஸ்டு கால்-ஆக மாற்றுகிறது என ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது, ஒரு ஏர்டெல் அழைப்பாளர் ஜியோ நம்பருக்கு போன் செய்கையில் அவருக்கு 20 வினாடி மட்டுமே ரிங் செல்லும். அதன்பின் ஜியோ நிறுவனத்திற்கு அந்த அழைப்பு மிஸ்டு காலாக கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் ஜியோ நிறுவனத்திலிருந்து ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த நபர் போன் செய்வார். இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த அழைப்பு இன்கமிங் காலாக மாறிவிடும். இந்திய தொலைதொடர்பு விதிகளின்படி தன்னுடைய நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு இன்கமிங் சென்றால் 6 பைசா அளவிற்கு அந்நிறுவனம் இன்கமிங் செல்லும் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது விதியாகும்.
மேலும் ஜியோ நிறுவனமானது 65 சதவீத டெலிபோன் டிராபிக்கை தன்வசம் வைத்துள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியது.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஜியோ நிறுவனம், பதிலளிக்கையில், இந்திய அரசாங்கம் விதித்துள்ள ரிங் அளவு 30 வினாடிகள் மட்டுமே. சர்வதேச அளவில் ரிங் நிர்ணய அளவு 15 முதல் 20 வினாடிகள் மட்டுமே இருக்கும். ஜியோ போனில் வருகின்ற இன்கமிங் அழைப்புகளில் 25 முதல் 30 சதவீதம் கால்கள் மிஸ்டு கால்களாக மட்டுமே வந்து விடுகின்றன என குறிப்பிட்டுள்ளது.
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…
சென்னை : அரசு சேவைகளை எளிதாக்கும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம்,…
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி,…