ஒடிசாவில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது.
இந்த ஆகாஷ் ஏவுகணை சோதனை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, இன்று (வெள்ளிக்கிழமை) ஒடிசாவின் கடற்கரை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் புதிய தலைமுறை ஆகாஷ் என்ஜி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
இதனை பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணை 2.5 மாக் வேகத்தில் செல்லக்கூடியது. இது சோதனையின் போது குறிப்பிடப்பட்ட இலக்கான 30 கி.மீ. தொலைவில் சரியாக மேலே சென்று தாக்கி அழித்துள்ளது.
மேலும், இந்த ஏவுகணை 60 கி.மீ உயரம் வரை வான் இலக்கை தாக்கக்கூடியது. டி.ஆர்.டி.ஓ கடந்த மூன்று நாட்களாக ஏவுகணை சோதனை செய்து வருகிறது. இந்த ஆகாஷ் ஏவுகணை சோதனை மூன்றாவது சோதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…