மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மதுக்கடை விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா கட்டுக்குள் வராததால் நேற்றுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதில், மதுக்கடைகள் மூடியதால் குடிமகன்கள் பலர் மது கிடைக்காத விரக்தியில் ரசாயனம் குடித்தும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.
அங்கு 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மதுக்கடை விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…