டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் unlock1.0 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்கள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், டெல்லியில் சலூன் கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்பாக்கள் மூடியே இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதையயடுத்து டெல்லியில் ஆட்டோ மற்றும் இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஒரு வாரத்திற்கு எல்லைகள் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கடைகளை திறக்க நாங்கள் சில விதிமுறையை பின்பற்றி வந்தோம், ஆனால், மத்திய அரசு அத்தகைய எந்த விதியையும் கூறவில்லை, எனவே எல்லா கடைகளும் இப்போது திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…