டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் unlock1.0 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்கள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், டெல்லியில் சலூன் கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்பாக்கள் மூடியே இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதையயடுத்து டெல்லியில் ஆட்டோ மற்றும் இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஒரு வாரத்திற்கு எல்லைகள் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கடைகளை திறக்க நாங்கள் சில விதிமுறையை பின்பற்றி வந்தோம், ஆனால், மத்திய அரசு அத்தகைய எந்த விதியையும் கூறவில்லை, எனவே எல்லா கடைகளும் இப்போது திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…
குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன்…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக்…
திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…
கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை…
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…