நாளைக்குள் பாஜக ஐடி பிரிவிலிருந்து அமித் மால்வியாவை நீக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்கப்படாவிட்டால், என்னை பாதுகாக்க விரும்பவில்லை என்றுதான் அர்த்தம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அமித் மால்வியா என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இயங்கும் பணியாளர்கள் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும் மோசமாக உள்ளது.  அதில் பணிபுரியும் உறுப்பினர்கள் சிலர் போலியான கணக்குகளை தொடங்கி, அதைக் கொண்டு என் மீது தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இதற்கு என்னைப் பின் தொடரும் கோபக்கார நபர்கள் யாராவது பதிலடி கொடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்யும் தவறுக்கு கட்சி எப்படி பொறுப்பேற்காதோ, அதேபோலத் தான் இதுவும் என்று கூறிருந்த நிலையில், தற்போது அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

40 minutes ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

1 hour ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

5 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

5 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

6 hours ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

6 hours ago