மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்து டிவீட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டரில், ‘தோனி தனது தனித்துவமான கிரிக்கெட் விளையாட்டின் மூலம் மில்லியன் கணக்கானவர்களை தனது ரசிகனாக மாற்றியுள்ளார். வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட் அணியினை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பங்களிப்பார் என நம்புகிறேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இனி கிரிக்கெட் உலகம் ஹெலிகாப்டர் ஷாட்களை மிஸ் செய்யும்.’ என பதிவிட்டுள்ளார்.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…