கடந்த வாரம் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வடமேற்கு டெல்லியிலுள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் இரு வேறு சமூகத்தினர் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக டெல்லி நிர்வாகம் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் கொண்டு தகர்த்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அவர்கள் மேற்கு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரணியில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் டெல்லியை சாதிக் கலவரங்களில் இருந்து பாதுகாக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து பேசிய அவர், டெல்லி முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், டெல்லி காவல்துறை அமித்ஷாவின் கையில் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் ஏதாவது நடந்தால் அது உலகம் அறியக்கூடிய செய்தியாக மாறும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறெல்லாம் நடந்தால் டெல்லியில் அமைதி இன்றி இருப்பதாக உலகம் கற்பனை செய்து விடும். உங்களிடம் அதிகாரம் தான் உள்ளது. ஆனால் டெல்லியை கையாள முடியாது என அமித்ஷாவை குறிப்பிட்டு பேசியுள்ளார் சரத்பவார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…