அமிதாப்பச்சனின் குரலுடன் வரும் கொரோனா காலர் ட்யூனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை நீக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ராகேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை, நீதியின் நலனுக்காக மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன் அத்தகைய சேவைக்கு பொருத்தமானவர் அல்ல, அதற்காக அவர் பணம் வசூலிக்கிறார். ரிங்டோனில் இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை பேசுவதற்கு இந்திய அரசு அமிதாப் பச்சனுக்கு கட்டணம் செலுத்தி வருகிறது. சில கொரோனா போர் வீரர்கள் தேசத்திற்கு பெரும் சேவையைச் செய்து வருகிறார்கள். சிலர் தங்கள் கடினமாக உழைத்து பெற்ற வருமானத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்துள்ளனர்.
மேலும், பிரபலமான கொரோனா தடுப்பு வீரர்கள் எந்தவொரு கட்டணமும் இன்றி தங்கள் சேவையை வழங்க இன்னும் தயாராக உள்ளனர். மூத்த நடிகருக்கு “சுத்தமான வரலாறு” இல்லை, ஒரு “சமூக சேவகர்” என்று தேசத்திற்கு சேவை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர்கள் ஏ.கே. துபே, பவன் குமார் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதி விசாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…