ஜவஹர்லால் நேரு மீதான குற்றசாட்டை பகிரங்கமாக அறிவித்த அமித்ஷா!

Published by
மணிகண்டன்

மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பாஜக கட்சி சார்பாக பாஜக தலைவர் அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு பற்றி சில விமர்சனங்களை முன்வைத்தார்.

அதாவது நேரு ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் மீதான போரை நிறுத்தி இருக்க கூடாது. அப்படி நிறுத்தாமல் இருந்திருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இருந்திருக்காது. மேலும், இந்த விஷயத்தை சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்கள் இங்கு பிரதமராக கூட ஆகி விடலாம், ஆனால், இந்தியாவில் உள்ள வெளி மாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு செல்பவர்களுக்கு காஷ்மீரில் வாக்குரிமை கூட கொடுக்கப்படுவதில்லை என் குற்றம் சாட்டினார்.

இதனால் தான் மற்ற மாநிலங்களைப் போல காஷ்மீரும் இருக்க வேண்டும் எனக்கூறி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. விரைவில், அங்கு பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவும்படி வழி வகை செய்யப்படும் என குறிப்பிட்டார்.

பிரச்சாரத்திற்கு வரும் காங்கிரஸ்காரர்களிடம் காஷ்மீர் விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள் என அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள் என கூறி, அமித்ஷா தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

14 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

14 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

15 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

15 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

16 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

18 hours ago