ஜவஹர்லால் நேரு மீதான குற்றசாட்டை பகிரங்கமாக அறிவித்த அமித்ஷா!

Published by
மணிகண்டன்

மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பாஜக கட்சி சார்பாக பாஜக தலைவர் அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு பற்றி சில விமர்சனங்களை முன்வைத்தார்.

அதாவது நேரு ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் மீதான போரை நிறுத்தி இருக்க கூடாது. அப்படி நிறுத்தாமல் இருந்திருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இருந்திருக்காது. மேலும், இந்த விஷயத்தை சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்கள் இங்கு பிரதமராக கூட ஆகி விடலாம், ஆனால், இந்தியாவில் உள்ள வெளி மாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு செல்பவர்களுக்கு காஷ்மீரில் வாக்குரிமை கூட கொடுக்கப்படுவதில்லை என் குற்றம் சாட்டினார்.

இதனால் தான் மற்ற மாநிலங்களைப் போல காஷ்மீரும் இருக்க வேண்டும் எனக்கூறி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. விரைவில், அங்கு பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவும்படி வழி வகை செய்யப்படும் என குறிப்பிட்டார்.

பிரச்சாரத்திற்கு வரும் காங்கிரஸ்காரர்களிடம் காஷ்மீர் விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள் என அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள் என கூறி, அமித்ஷா தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

7 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

7 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

9 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

9 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

11 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

12 hours ago