அனாமிகா சுக்லா வழக்கு! இன்று மற்றொரு ஆசிரியை கைது.!

Published by
murugan

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அனாமிகா சுக்லா என்ற பெயரில் வேலைக்குச் சென்ற அனிதா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை அனாமிகா சுக்லா என்பவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு,  கடந்த 13 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களில் இயங்கும் வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடரபான விசாரிக்க  மாநில தொடக்க கல்வி துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டார். இந்த விசாரணையில், அனமிகா சுக்லா பெயரில் சான்றிதழ்களை கொண்டு வேலை செய்து வந்த பிரியா சிங் என்பவரை  போலீசார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி உண்மையான அனாமிகா சுக்லா கல்வி அதிகாரி முன் ஆஜராகி, தனது கல்வி சான்றிதழ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என புகார் கொடுத்தார். அனாமிகா பெயரில் வேலை செய்பவர்கள் போலியானவர்கள். அனாமிகாவின் சான்றிதழ்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மோசடிக்கும், அனாமிகாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கல்வி அதிகாரி பிரஜாபதி கூறினார். 

இதையடுத்து, இந்த வழக்கில் மெயின்புரியை சேர்ந்த அனிதா தேவி என்ற மற்றொரு பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வேலையில் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. அனிதா தேவி கடந்த ஒரு வருடமாக ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். மேலும், அவரிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

48 minutes ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

1 hour ago

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

18 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

19 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

20 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

20 hours ago