அனாமிகா சுக்லா வழக்கு! இன்று மற்றொரு ஆசிரியை கைது.!

Published by
murugan

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அனாமிகா சுக்லா என்ற பெயரில் வேலைக்குச் சென்ற அனிதா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை அனாமிகா சுக்லா என்பவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு,  கடந்த 13 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களில் இயங்கும் வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடரபான விசாரிக்க  மாநில தொடக்க கல்வி துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டார். இந்த விசாரணையில், அனமிகா சுக்லா பெயரில் சான்றிதழ்களை கொண்டு வேலை செய்து வந்த பிரியா சிங் என்பவரை  போலீசார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி உண்மையான அனாமிகா சுக்லா கல்வி அதிகாரி முன் ஆஜராகி, தனது கல்வி சான்றிதழ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என புகார் கொடுத்தார். அனாமிகா பெயரில் வேலை செய்பவர்கள் போலியானவர்கள். அனாமிகாவின் சான்றிதழ்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மோசடிக்கும், அனாமிகாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கல்வி அதிகாரி பிரஜாபதி கூறினார். 

இதையடுத்து, இந்த வழக்கில் மெயின்புரியை சேர்ந்த அனிதா தேவி என்ற மற்றொரு பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வேலையில் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. அனிதா தேவி கடந்த ஒரு வருடமாக ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். மேலும், அவரிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

34 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago