திரிபுராவில் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மேற்கு வங்க தலைவர் சயனி கோஷ் அவர்கள் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.
அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடி மிரட்டும் தோணியில் பேசியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள், திரிபுராவில் அராஜகம் ஆட்சி செய்வதாகவும், மக்கள் வெளிப்படையாக கத்திகள் மற்றும் குச்சிகளுடன் சுற்றிதிரிகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும் 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ள நிலையில் பிரதமரிடம் வலுக்கட்டாயமாக திரிபுரா பிரச்சனை குறித்து நான் பேசுவேன் எனவும் மம்தா பானர்ஜி அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…