Categories: இந்தியா

முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

Published by
மணிகண்டன்

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர்.

நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் மட்டும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக நேற்று நடைபெற்று முடிந்தது. தமிழகம், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவுகள் , அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் என சேர்த்து 21 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.

இதில், அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய அரசுடன் தொடர்பில்லாமல் இந்திய எல்லைக்குள் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் வரலாற்றில் முதன் முறையாக இந்திய தேர்தலில் வாக்களித்துள்ளனர். சுமார் 300 மக்கள் தொகை கொண்டுள்ள இந்த பழங்குடியினாரில் 7 பேர் இந்திய வாக்காளர் அடையாள அட்டை கொண்டு அந்தமான் நிகோபார் தீவில் 411வது வாக்குசாவடியில் வாக்களித்தனர்.

ஷாம்பன் பழங்குடியினர் வெளியுலக தொடர்பை துண்டித்து மழை கிராமங்களில் வசித்து வருபவர்கள். முழுக்க முழுக்க வேட்டையாடி வாழும் இவர்கள், தாவரங்கள் அதன் மருத்துவ குணங்களை நன்கு அறிந்தவர்கள் இவர்கள்.  குரங்கு, பன்றி, முதலை இறைச்சிகளையும் உணவாக உட்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் வெளியாட்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.

ஷாம்பன் பழங்குடியினர் சிலர் மட்டும் தங்கள் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து வெளியுலக மக்களிடம் தங்களுக்கு தேவையானவைகளை பெற்றுக்கொண்டு, பின்னர் தங்கள் மக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றுவிடுவர்.

இப்படி வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்து வந்த ஷாம்பன் பழங்குடியினர்களுக்கு அவர்கள் மொழி தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்து அவரின் மூலம், தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளித்து பின்னர் ஷாப்பன் பழங்குடியினரில் இருந்து 7 பேர் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் நேற்று முதன் முறையாக இந்திய ஜனநாயக கடமையை ஆற்றினர்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

1 hour ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

2 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

2 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

3 hours ago