ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திருப்ப பெறுவதாக தற்போதைய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.மேலும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெறுவதாகவும் அறிவித்தார். அதற்கு பதிலாக 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் தனக்கு அளிக்கப்பட பாதுகாப்பை திருப்ப பெறப்பட்டதை அடுத்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திர பாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சந்திர பாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.ஆனால் பாதுகாப்பு பணிகளை வழங்க வேண்டியது யார் என்பதை கமேண்டோ படை மற்றும் மாநில பாதுகாப்பு படை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…