ஆந்திராவில் ராசாயன ஆலையில் தீ விபத்து.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ள, பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் உள்ள உலகைளில் ஒரு உலை வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்து நடந்த போது, அங்கு 4 பேர் பணியில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் அந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் மருந்து பிரிவுகளில் இருந்து கழிவுகளை அகற்றும் போது இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், இந்த விபத்து நடந்த போது, அங்கு பணியில் இருந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நான்கு பேரில் ஒருவருக்கு பாலத்தை காயம் ஏற்பட்ட நிலையில், அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி வினய் சந்த் கூறுகையில், ஆலையில் ஐந்து உலைகள் இருந்தன, அவற்றில் ஒன்று வெடித்தது என்றும், இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன், முழு மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…