ஆந்திரபிரதேசத்தில் மே 5 முதல் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு…

Published by
Hema

கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  ஊரடங்கை அறிவித்துள்ளார்…

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 23,920 பேருக்கு கொரோனா  தொற்று பதிவாகியுள்ளன. மேலும் 83 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,43,178 ஆக அதிகரித்துள்ளது, இதுவரையிலும் 9,93,708 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 8,136 பேர் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திர அரசு உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசித்து ஆந்திர மாநிலம் முழுவதும் மதியம் 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பகுதி ஊரடங்கு உத்தரவு விதிக்க திங்கள்கிழமை முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை திறந்திருக்கும், அதன் பிறகு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேர ஊரடங்கானது ஏற்கனவே இரவு 10 மணி முதல் மாநிலத்தில் அமலில் உள்ள நிலையில் புதிய பகுதி நேர ஊரடங்கு புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

Published by
Hema

Recent Posts

இன்று முதல் ஜூலை 5 வரை பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

இன்று முதல் ஜூலை 5 வரை பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல்…

30 seconds ago

உங்க முன்னாள் மனைவிக்கு மாசம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்கணும்! முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர…

35 minutes ago

“ரொம்ப குறைவான வரி”…இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…

1 hour ago

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்… ஆந்திராவில் அதிரடி கைது!

ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…

2 hours ago

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

2 hours ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

11 hours ago