புல்வாமா தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல் தவிர்க்கப்பட்டது.!

Published by
பாலா கலியமூர்த்தி

காஷ்மீரின் கரேவா பகுதியில் நேற்று  52 கிலோ வெடிபொருட்களை மீட்டதன்  மூலம் புல்வாமா பாணி பயங்கரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தால் தவிர்க்கப்பட்டது. இந்த  வெடிபொருட்கள் கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதல் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிபொருட்கள் மீட்கப்பட்ட இடம் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலைக்கு அருகிலும், புல்வாமா தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக கூறப்படுகிறது.”நாங்கள் மற்றொரு புல்வாமா  தாக்குதலைத் தவிர்த்துவிட்டோம்” என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று காலை 8 மணியளவில் தேடுதல் வேட்டையின் போது கடிகலின் கரேவா பகுதியில் உள்ள ஒரு நீர் தொட்டியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“ஒவ்வொன்றிலும் 125 கிராம் எடையுள்ள 416 பாக்கெட் வெடிபொருட்கள் இருந்தன” என்று ஒரு அதிகாரி கூறினார். மேலும் 50 டெட்டனேட்டர்கள் அந்த பகுதியில் உள்ள மற்றொரு தொட்டியில் மீட்கப்பட்டன.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி, புல்வாமாவில்  சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை நோக்கி  வெடிகுண்டு நிறைந்த கார்   ஒன்று மோதியதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழு ஜெய்ஷ்-இ-முகமது (இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தார். பின்னர், பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத பயிற்சி முகாமைத் தாக்கியது.

இதனால், இது இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தில்  அதிகரித்தது. கடந்த மாதம், என்ஐஏ இந்த தாக்குதலை பயங்கரவாதக் குழு எவ்வாறு  திட்டமிட்டது மற்றும் செயல்படுத்தப்பட்டது என்பதை குறித்து   இந்த வழக்கில் ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ரவூப் அஸ்கர் மற்றும் பலரை என்ஐஏ சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

28 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago