மேற்கு வங்க மாநிலத்தில் 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 60 வயதான மூத்த மருத்துவர் பிப்லாப் கண்டி தஸ்குப்தாவுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்த மருத்துவரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதித்த 69 வயதான சிசிர் மண்டல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று AMRI என்ற மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே மேற்கு வங்கத்தில் 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…