குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக மற்றொரு நபரை டெல்லி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஜனவரி 26 வன்முறையின் போது செங்கோட்டையில் வாள் சுற்றியதாக மனிந்தர் சிங்கை டெல்லி காவல்துறையினர் கைது செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு 29 வயதான ஜஸ்பிரீத் சிங் என்ற நபர் (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜஸ்பிரீத் சிங் மற்றும் மனிந்தர் சிங் இருவரும் டெல்லியின் ஸ்வரூப் நகரில் வசிப்பவர்கள். மனிந்தர் சிங் ஸ்வரூப் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் வாள் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார், மேலும் கார் ஏசி மெக்கானிக்காக பணிபுரிகிறார்.
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில் , ஜனவரி 26 வன்முறையின் போது ஜஸ்பிரீத் சிங் செங்கோட்டையின் மீது ஏறி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் செங்கோட்டையில் சேதத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட ஜஸ்பிரீத் சிங் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…