தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகக் கோரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனுதாக்கல் செய்தார். அவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றமும் மறுத்து, விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, அர்னாப் கோஸ்வாமி மற்றும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது. தற்பொழுது இந்த இடைக்கால ஜாமீனை 4 வாரங்களுக்கு நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…