பாதுகாப்பு காரணங்களுக்காக அர்னாப் கோஸ்வாமி, தலோஜா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அன்வை நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதன்காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது.
அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தும் முகாமில் இருக்கும் அவரை இன்று காலை போலீஸ் வேனில் தலோஜா மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அந்த வேனின் ஜன்னல்களை சுற்றி கருப்பு நிற திரையால் மூடப்பட்டுள்ளது. மேலும், அர்னாப் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…