Child birth at Bibarjar storm [Image source : REUTERS]
குஜராத் பிபர்ஜார் புயல் சமயத்தில் சுமார் 700 குழந்தைகள் பிறந்துள்ளன.
குஜராத் கடற்கரையோரம் உருவான பிபர்ஜார் புயல் காரணாமாக கடந்த 10 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த புயலானது, கடந்த வியாழக்கிழமை மாலை குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.
புயல் கரையை கடக்கும் நேரம் மழையின் அளவு , காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், அரசாங்கம் முன்கூட்டியே 11 மாவட்டங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர்களை வெளியேற்றினர். குறிப்பாக அந்த மாவட்டங்களில் இருந்து 1,152 கர்ப்பிணி பெண்கள் முன்கூட்டியே வெளியேற்றபட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த கர்ப்பிணிப் பெண்களில் 707 பேருக்கு புயல் சமயத்தில் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இதில், கட்ச் மாவட்டத்தில் சுமார் 348, ராஜ்கோட்டில் 100, தேவபூமி துவாரகாவில் 93, கிர் சோம்நாத்தில் 69, போர்பந்தரில் 30, ஜூனாகத்தில் 25, ஜாம்நகரில் 17, ராஜ்கோட் மஹாநகர்பாலிகாவில் 12, ஜுனாகத் முனிசிபல் கார்ப்பரேஷனில் 8 பிரசவங்கள் என தகவல்கள் பதிவாகியுள்ளன.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…