கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரணை நடைபெறும் – காவல்துறை .!

Published by
murugan
  • நவீத் பாபா, ரபி அகமது ஆகிய இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை டி.எஸ்.பி தேவீந்தர் சிங் தப்பிக்க உதவி செய்தார்.
  • டி.எஸ்.பி தேவீந்தர் சிங்  கைது செய்யப்பட்டு காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு போலீசார் என அனைவரும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அதே நேரத்தில் ராணுவம் வீரர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது சந்தேகப்படும் படியான 2 நபர்களை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

நவீத் பாபா, ரபி அகமது ஆகிய இரண்டு பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் அவர்களை ஸ்ரீநகர் போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் சோபியான் மாவட்டத்திலிருந்து தப்பி  செல்ல காரில் அழைத்துச் சென்றார் என தெரியவந்தது.

இதை தொடர்ந்து டி.எஸ்.பி தேவீந்தர் சிங்  கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யப்பட்ட தேவீந்தர் சிங் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் காஷ்மீர் மாநிலத்தில்  விமான நிலைய பாதுகாப்பு பணியில் தேவீந்தர் சிங் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

6 hours ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

6 hours ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

7 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

7 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

10 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

10 hours ago