காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதே நேரத்தில் ராணுவம் வீரர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது சந்தேகப்படும் படியான 2 நபர்களை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர்.
நவீத் பாபா, ரபி அகமது ஆகிய இரண்டு பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் அவர்களை ஸ்ரீநகர் போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் சோபியான் மாவட்டத்திலிருந்து தப்பி செல்ல காரில் அழைத்துச் சென்றார் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து டி.எஸ்.பி தேவீந்தர் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யப்பட்ட தேவீந்தர் சிங் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் காஷ்மீர் மாநிலத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியில் தேவீந்தர் சிங் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…